Wednesday 25 February 2015

நமக்கு ஏற்படும்  நிகழ்வுகளில் மகிழ்வதுபோல் , துயரங்களில் வருந்துவது ஒன்றும் புதிதில்லை . ஆனாலும் துயரம் ஏற்படும் வேளைகளில் மனதினை திடப்படுத்திக்கொண்டால் நம் சிந்தனை கொஞ்சம்  சீராவது உண்மைதான் . ஒரு சிலர் தவறுதலாக சிந்தித்து தற்கொலை முயற்சிகளை எடுப்பதன் விளைவு அவனின் குடும்பமே வருந்தும் அளவிற்குமாறிவிடுகிறது . எதற்கும் தற்கொலை ஒரு தீர்வாகாது .  பலவீனமான மனம் படைத்தவர்களே இதை ஒரு தீர்வாக நினைத்து முடிவெடுக்கின்றனர் . தற்கொலை சிந்தனை வருகின்ற அந்த ஒரு நிமிடத்தை கடந்துவிட்டால் நாம் உயிர்பிழைப்பதும் , தெளிவாவதும் உறுதி ...


பல பள்ளிக்கூடங்கள் , பல கல்லூரிகள் இருப்பதுபோலவே பல பட்டதாரிகள் ஆண்டுதோறும் வந்த வண்ணமே இருக்கின்றார்கள் . அப்படி வருபவர்களில் நூரில் ஐம்பது சதவீத பட்டதாரிகளுக்குக்குக்கூட வேலை கிடைப்பதில்லை . வேலையை மட்டுமே நோக்கிய , வாழ்வு நிறைவு பெறாத பட்டதாரிகளின் நிலை இனி வரும் காலங்களில் என்னவாகும்?

எதற்கும் ஒரு அளவு உண்டு. அதைப்போலவே எதற்கும் ஒரு எல்லை உண்டு . நம் இலக்கை ஒரு எல்லையை வைத்து  பயணிக்கும்போது வெற்றிக்கனி நம்  கையில் கிட்டுவது மறுக்க முடியாத உண்மை ...

                                           "தீயதைக் கேட்காதே
                                             தீயதைப் பேசாதே
                                             தீயதைச் செய்யாதே "
நாம் ஒரு நல்ல பழக்கவழக்கத்தை மேற்கொள்வது , கடைபிடிப்பது மிகவும் கடினம் . ஆனால் ஒரு தீயப்பழக்கத்தை கடைபிடிப்பது மிகவும் சுலபம் . தீயப்பழக்கங்களான புகைப்பிடித்தல் , மது அருந்துதல் , விலைமாதருடன் உறவுகொள்ளுதல் இந்த மூன்று பழக்கங்களை உடைய ஒருவனுக்கு இறப்பு வெகுதூரம் இல்லை . இவை எல்லாமே தனக்குத் தாமே வைத்துக்கொள்ளும் சுயக்கொள்ளி
அல்லவா ?



No comments:

Post a Comment