Sunday 22 February 2015

பொருளாதாரத்தின் அடிப்படையில் ஏழை , பணக்காரன் , நடுத்தரம் என்று வகைப்படுத்தப்படுகிறது . அன்றாடம் வயிற்றுப்பசிக்காக யாசகம் கேட்டு அதில் பசியாறும் மனிதர்களை எந்த வகையில் நாம் சேர்ப்பது . ஊழலை எதிர்க்கவும் , குறைக்கவும் அரசாங்கம் எந்த அளவிற்கு முயற்சி எடுக்கிறதோ அதில் ஒரு சிறுபங்கு யாசகம் கேட்பவர்களுக்கு எடுத்து அவர்களின் நிலைமையை மாற்றினால் சமுதாயம் வளரும்...

பெண்ணுக்கு திருமண வயது 21 ஆனால் 30 வயதினைக் கடந்தும் திருமணமாகாத பெண்ணின் மனம் என்ன பாடுபடும்? அவளின் எதிர்காலம் என்னவாகும்? அவளின் அழகும், இளமையும் செய்த பாவமென்ன ?

ஒரு குழந்தை பிறக்க முதன்மைக் காரணம் ஆணும் , பெண்ணும் சேர்ந்ததன் விளைவாக அல்லது பலனாக கரு உருவாதலே ஆகும். ஒரு பெண் குழந்தையை சுமக்க வாய்ப்பில்லை என்றால் அதற்கு அவள் மட்டுமே காரணம் என்பது முட்டாள்தனமான ஒன்றாகும். ஆணுக்கும் குறை இருக்கலாம் , கருவறையில் கோளாறு இருக்கலாம் . இந்த இயற்கை நிகழ்விற்காக அவளை விழாக்களில் புறக்கணிப்பது எந்த அடிப்படையில் நியாமாக கருதப்படுகிறது என்று புலப்படவில்லை . இங்கே குழந்தைப்பேறு அடையாமல் ஒருத்தி படும் அவலத்தைப் பாருங்கள் ...

கண்விழித்து காணும்போது அந்த நிகழ்வு உண்மையாக இருந்திருக்க கூடாதா என்றுத் தோன்றும் . அப்படி பல நல்ல கனவுகளும் , கெட்டக் கனவுகளும் நம் உறக்கத்தில் காண்பது இயல்புதான். கனவுக்கென்று எந்த ஒரு அறிவியல் சார்ந்த நிரூபணமும் இல்லை இதுவரையில். நம் நினைவுகளின் மாறுபட்ட வெளிப்பாடே கனவாகத் தோன்றுகிறது . இங்கேயும் ஒருவன் கனவுக் காண்கிறான் வானத்தில் ...

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். ஒரு செயல் தொடங்குவது முதலே இனிதே நடந்துவந்தால் அந்த செயல் எந்த ஒரு தொய்வுமின்றி நன்றாக நடந்து முடியும். ஒன்றன்பின் ஒன்றாக அனைத்தும் நமக்கு கிடைத்துவிட்டால் அதைவிட பேரின்பம் , நிம்மதி வேறு என்னவாக இருக்கும்?

மனிதனை நோக்கிவரும் அனைத்து தடைகளையும் உடைத்து , வெற்றிப் பாதையினை கண்டறிந்து அதன்வழியேப் பயணித்தால் வாழ்வு சிறந்து விளங்குவது உறுதி ...


No comments:

Post a Comment